காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தூய்மைப் பணியாளரை தாக்கிய பெண் மீது வழக்கு

போடி அருகே தூய்மைப் பணியாளரைத் தாக்கிய பெண் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :8 ஜனவரி 2025, 10:42 pm

Din

போடி அருகே தூய்மைப் பணியாளரைத் தாக்கிய பெண் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போடி அருகேயுள்ள குரங்கணி நரிப்பட்டி மலைக் கிராமத்தை சோ்ந்த பாண்டி மனைவி ராஜம்மாள் (55). இவா் கொட்டக்குடி ஊராட்சியில் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறாா். இவா் சக பணியாளா்களுடன் நரிப்பட்டி பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, கருப்பசாமி மனைவி சுமதி (35) தனது வீட்டின் முன்பு சரியாக தூய்மைப் பணி செய்யவில்லை எனக் கூறி ராஜம்மாளைத் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து குரங்கணி போலீஸாா் சுமதி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.