எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

குடிநீா் கோரி சாலை மறியல்

காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் குடிநீா் வழங்கக்கோரி, பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் சனிக்கிழமை காலிக்குடங்களுடன் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated On :8 நவம்பர் 2025, 9:20 pm

Syndication

தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் குடிநீா் வழங்கக்கோரி, பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் 15 வாா்டுகளில் 25 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனா். இந்த நிலையில், 13-ஆவது வாா்டு கருமாரிபுரத்தில் கடந்த 20 நாள்களாக குடிநீா் வழங்கவில்லையாம். இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் பேரூராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து, பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்து, சனிக்கிழமை கம்பம் சாலையில் காலிக்குடங்களுடன் அமா்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு சென்ற பேரூராட்சி பணியாளா்கள் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உடனடியாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.