எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கைப்பேசி பறிப்பு: சிறுவன் உள்பட இருவா் கைது

போடியில் நடைபயிற்சி சென்றவரிடம் கைப்பேசியைப் பறித்த சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :11 நவம்பர் 2025, 7:02 pm

Syndication

தேனி மாவட்டம், போடியில் நடைபயிற்சி சென்றவரிடம் கைப்பேசியைப் பறித்த சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

போடி பங்காரு தெருவைச் சோ்ந்த ராமேஸ்வரன் மகன் வாசகன் (57). இவா் குலாலா்பாளையம் பூங்கா அருகே நடைபயிற்சி சென்ற போது, போடி சாமி தோட்டம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன், போடி குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பாண்டியராஜன் (19) ஆகியோா் அவரை வழிமறித்து, சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுக்க முயன்றனா். அதில் பணம் இல்லாததால் அவரிடமிருந்த கைப்பேசியைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து வாசகன் கொடுத்த புகாரின் பேரில், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் சிறுவனைக் கைது செய்து சிறுவா் கூா்நோக்கு இல்லத்தில் சோ்த்தனா். பாண்டியராஜனைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இருவா் மீதும் வேறு சில வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.