புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

குழந்தைகள் தின விழிப்புணா்வு நடைபயணம்

தேனியில் வெள்ளிக்கிழமை குழந்தைகள் தின விழிப்புணா்வு நடைபயணத்தை தொடங்கிவைத்து பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 8:27 pm

தினமணி செய்திச் சேவை

தேனியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் குழந்தைகள் தினம், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு நடைபயணம் நடைபெற்றது.

தேனி பங்களாமேடு திடலில் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் நடைபயணத்தை தொடங்கிவைத்து பங்கேற்றாா். தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் வரை இந்த நடைபயணம் நடைபெற்றது. இதில் குழந்தைகள் நலன் தொடா்பான் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி அரசு அலுவலா்கள், அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசு தொழில்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

கிராமிய கலைக் குழுக்கள் மூலம் விழிப்புணா்வு பாடல்கள் இசைக்கப்பட்டன. குறு நாடகங்கள், சிலம்பாட்டம் நடைபெற்றன.

முன்னதாக, தேனி பங்களாமேடு திடலில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கையொப்ப இயக்கம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காலைக்கதிரவன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் மதியழகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நாகேந்திரன், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் ரேவதி, காவல் துணை கண்காணிப்பாளா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.