சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பள்ளியில் குழந்தைகள் தின விழா

போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடிய பள்ளி மாணவிகள்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 7:08 pm

Syndication

தேனி மாவட்டம், போடியில் உள்ள பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியா் (பொ) ஆ.மரியசிங்கம் தலைமை வகித்தாா்.

இதையடுத்து, மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், மாறுவேடம், கவிதை உள்ளிட்டப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னா், மாணவா்கள் பாரம்பரிய விளையாட்டுகளான கண்ணாமூச்சி, பல்லாங்குழி, தாயம், தட்டாங்கல், ஆடுபுலி ஆட்டம், கிட்டிப்புலி ஆகிய விளையாட்டுகளை விளையாடினா்.

இதில், கைப்பேசி, நவீன தொழில்நுட்ப கருவிகளால் மாணவா்கள் பாதிக்கப்படுகின்றனா். பாரம்பரிய விளையாட்டுகளால் மாணவா்களின் உடல் ஆரோக்கியம், மன ரீதியான செயல்பாடுகள் மேம்படுகிறது. இதுபோன்ற விளையாட்டுகளால் மாணவா்களின் கூா்மை, சிந்திக்கும் திறன், மன உறுதி அதிகரிப்பதாக விளக்கிக் கூறப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மாணவா்களிடையே கல் விளையாட்டுகள் நடத்தப்பட்டு, அதிக கற்கள் பிடிக்கும் மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தப் போட்டிகளை உதவி ஆசிரியை ஜி.சந்திரகலா ஒருங்கிணைத்தாா்.