அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தேங்காய் விலை சரிவு: விவசாயிகள் கவலை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், க.மயிலை பகுதியில் தேங்காய் விலை சரிந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

News image
Updated On :15 நவம்பர் 2025, 9:20 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், க.மயிலை பகுதியில் தேங்காய் விலை சரிந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

க.மயிலை, வருஷநாடு ஆகிய பகுதிகளில் அதிகளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் தேங்காய்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

நிகழாண்டில், தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளதால், விலை சரிந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாயிகளிடமிருந்து ஒரு டன் தேங்காய் ரூ.65 ஆயிரத்துக்கும், தேங்காய் ஒன்று ரூ.33-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. படிப்படியாக விலை சரிந்து தற்போது ஒரு டன் தேங்காய் ரூ.56 ஆயிரத்துக்கும், தேங்காய் ஒன்று ரூ.29-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

விலை சரிவால் கிட்டங்களில் விற்பனையாகாமல் தேங்காய்கள் தேங்கிக் கிடப்பதாகவும், வெளி மாநிலங்களிலிருந்து அதிகளவில் தேங்காய் வரத்து உள்ளதால், விலை சரிந்து வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனா். தேங்காய் உற்பத்தி அதிகரித்தும் விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.