பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

வீரபாண்டி அருகே தேனி- கம்பம் சாலையில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :21 நவம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

வீரபாண்டி அருகே தேனி- கம்பம் சாலையில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கூடலூா், காந்தி கிராமத்தைச் சோ்ந்த சங்கரபாண்டி மனைவி பாக்கியம் (60). இவா், அதே ஊரைச் சோ்ந்த தனது உறவினா் பாலு மகன் சரவணனுடன் (35) இரு சக்கர வாகனத்தில் கூடலூரிலிருந்து வீரபாண்டிக்குச் சென்றாா். அப்போது, உப்பாா்பட்டி விலக்கு அருகே வேகத் தடையை கடந்த போது, பாக்கியம் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.