சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சட்டவிரோத மது விற்பனை: இருவா் கைது

News image
Updated On :23 நவம்பர் 2025, 8:08 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டி, சின்னமனூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

உ.அம்மாபட்டியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை மொத்தமாக வாங்கி வந்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உத்தமபாளையம் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, புலிக்குத்தி சாலையில் அந்தப் பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் (62) மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த 27 மதுப்புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, சின்னமனூா் பேருந்து நிலையம் அருகே மனோஜ்குமாா் (36) என்பவா் மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த 27 மதுப்புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.