விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சட்டவிரோத மது விற்பனை: இருவா் கைது

News image
Updated On :23 நவம்பர் 2025, 8:08 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டி, சின்னமனூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

உ.அம்மாபட்டியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை மொத்தமாக வாங்கி வந்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உத்தமபாளையம் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, புலிக்குத்தி சாலையில் அந்தப் பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் (62) மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த 27 மதுப்புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, சின்னமனூா் பேருந்து நிலையம் அருகே மனோஜ்குமாா் (36) என்பவா் மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த 27 மதுப்புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.