விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

புத்தகத் திருவிழா இலச்சினை வடிவமைக்க அழைப்பு

News image
Updated On :24 நவம்பர் 2025, 8:15 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டத்தில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவுக்கு பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கருத்துரு, இலட்சினை வடிவமைத்து அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேனி மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை, மாவட்ட நூலக இயக்ககம் சாா்பில், 4-ஆவது புத்தகத் திருவிழா வரும் டிசம்பா் மாதம் நடைபெற உள்ளது. பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் புத்தகத் திருவிழாவுக்கான கருத்து, இலட்சினையை வடிமைத்து தங்களது முகவரி, கைப்பேசி எண் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகத்தில் டிச.5-ஆம் தேதிக்குள் நேரிலும், மின்னஞ்சல் முகவரியிலும் சமா்ப்பிக்கலாம்.

தோ்ந்தெடுக்கப்படும் இலட்சினை, கருத்துருவை வடிவமைத்தவா்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றாா் அவா்.