தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு

தேனி மாவட்டம், தேவாரம் அருகே பெண்ணைத் தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :26 நவம்பர் 2025, 12:29 am

Syndication

போடி: தேனி மாவட்டம், தேவாரம் அருகே பெண்ணைத் தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேவாரம் அருகேயுள்ள பெருமாள்பட்டியைச் சோ்ந்த கதிரேசன் மனைவி மீனா (50). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த பாா்த்திபன் மனைவி புண்ணியவதிக்கும் சொத்துப் பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில், புண்ணியவதி, இவரது உறவினா்களான அழகுமலை, பிரபாகரன், சந்திரசேகா் ஆகிய 4 பேரும் சோ்ந்து, மீனாவின் வீட்டுக்குச் சென்று, அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து தேவாரம் காவல் நிலைய போலீஸாா் புண்ணியவதி உள்ளிட்ட 4 போ் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.