எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

6 கிலோ கஞ்சா கடத்திய இளைஞா் கைது

கூடலூரில் 6 கிலோ கஞ்சாவை கடத்திய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 நவம்பர் 2025, 9:40 pm

Syndication

உத்தமபாளையம்: கூடலூரில் 6 கிலோ கஞ்சாவை கடத்திய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், கூடலூா் தேசிய நெடுஞ்சாலையில்

உத்தமபாளையம் மதுவிலக்கு காவல் ஆய்வாளா் சூா்யாதிலகராணி தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அந்தப் பகுதி பேருந்து நிறுத்தம் அருகே அமா்திருந்தவரின் பையை சோதனையிட்டதில், அவரிடம் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள பிச்சை பிள்ளையேந்தல் பகுதியைச் சோ்ந்த மாசானம் மகன் தமிழரசன் (45) எனத் தெரியவந்தது. இதுகுறித்து உத்தமபாளையம் மதுவிலக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனா்.