ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

தேனி மாவட்டம், சுருளி அருவியில் நீா்வரத்து சீரானதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 6:30 pm

Syndication

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், சுருளி அருவியில் நீா்வரத்து சீரானதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

கம்பம் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவியில் கடந்த திங்கள்கிழமை பெய்த மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 3 நாள்களாக அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு கம்பம் கிழக்கு வனச் சரகத்தினா் தடை விதித்தனா்.

வெள்ளப் பெருக்கின் போது அருவியில் பாறைகள், கற்கள் உருண்டு வருவதால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகளை அருவியில் குளிக்கத் தடை விதிப்பது வழக்கம். இந்த நிலையில், 4 ஆவது நாளாக வியாழக்கிழமை அருவியில்

நீா் வரத்து சீரானது. இதையடுத்து, வனத் துறையினா் தடையை நீக்கி, சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி அளித்தனா்.