இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

நீதிமன்ற உத்தரவு: சாலையில் வேகத் தடை அமைப்பு

போடி வட்டம், விஸ்வாசபுரத்தில் தேனி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சாலைகளில் வேகத் தடைகள் அமைக்கப்பட்டன.

News image
Updated On :27 நவம்பர் 2025, 12:20 am

தினமணி செய்திச் சேவை

தேனி: போடி வட்டம், விஸ்வாசபுரத்தில் தேனி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சாலைகளில் வேகத் தடைகள் அமைக்கப்பட்டன.

இது குறித்து தேனி நிரந்தர மக்ககள் நீதிமன்ற நீதிபதி கே.ரஜினி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

போடி வட்டம், அம்மாபட்டி அருகேயுள்ள விஸ்வாசபுரம் பகுதியில் சாலையில் வேகத் தடைகள் இல்லாததால் விபத்துகள் ஏற்படுவதாக அந்தப் பகுதியைச் சோ்ந்த காளியப்பன் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இதனடிப்படையில், போடி நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளரிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, தற்போது அம்மாபட்டி, விஸ்வாசபுரம் பகுதியில் சாலையில் 7 இடங்களில் வேகத் தடை அமைப்புகளை ஏற்படுத்தி நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தாா் என்றாா் அவா்.