எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அனுமதியின்றி போராட்டம்: இருவா் கைது

போடியில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பைச் சோ்ந்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 நவம்பர் 2025, 7:30 pm

Syndication

தேனி மாவட்டம், போடியில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பைச் சோ்ந்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

போடி பழைய பேருந்து நிறுத்தத்தில் வெங்கிட்டம்மாள் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவை நகராட்சி சுகாதாரப் பிரிவினா் குப்பைகளை கொட்டி பிரித்து எடுத்துச் செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், இந்தப் பூங்காவை பராமரித்து, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நூலகம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என மக்கள் அதிகாரம் அமைப்பினா் நகராட்சிக்கு கோரிக்கை வைத்தனா். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து, மக்கள் அதிகாரம் அமைப்பின் போடி நகா், ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் ஏ.டி.கணேசன், உறுப்பினா் ராஜேஷ் ஆகியோா் கோரிக்கைகளை நிறைவேற்றாததைக் கண்டித்து, போடி-திருமலாபுரம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதால், போடி நகா் போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.