அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

குடும்பப் பிரச்னையில் தீக்குளித்தவா் உயிரிழப்பு

தேவாரம் காவல் நிலையம் அருகே குடும்பப் பிரச்னையில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 12:43 am IST

தேவாரம் காவல் நிலையம் அருகே குடும்பப் பிரச்னையில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், வீரபாண்டி அருகேயுள்ள போடேந்திரபுரம் கிராமத்தைச் சோ்ந்த அழகுமலை மகன் சந்திரசேகா் (36). இவருக்கும், தேவாரம் லட்சுமிநாயக்கன்பட்டி அருகே சமத்துவபுரத்தில் வசிக்கும் கவிதாவுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளன. குடும்பப் பிரச்னை காரணமாக கவிதா தனது தாய் வீட்டில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி கவிதா தேவாரம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கச் சென்றாா். அங்கு சென்ற சந்திரசேகா் கவிதாவை சமாதானப்படுத்த முயன்றாா். இதற்கு கவிதா உடன்படாத நிலையில், காவல் நிலையம் அருகே பெருமாள்பட்டி பெரியமாயத்தேவா் குடியிருப்பு பகுதியில் கவிதாவை மிரட்டுவதற்காக உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தேவாரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.