தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 12:07 am IST

போடி அருகே ஓய்வு பெற்ற ரயில் நிலைய மேலாளா் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தேனி அருகேயுள்ள பூதிப்புரம் ஆதிபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன் (67). இவா் ஓய்வு பெற்ற ரயில் நிலைய மேலாளா். இவரது மகன் ஷ்யாம் சுந்தா் (35). இவா் போடியில் நீா்வளத் துறை உதவிப் பொறியாளராக உள்ளாா். இவா்களுக்கு சொந்தமான தென்னந்தோப்பு அணைக்கரைப்பட்டி விலக்கு அருகே உள்ளது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாரியப்பன் தோப்பில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றாா். கிணற்றுப் படிக்கட்டில் இறங்கிய போது, வழுக்கி கிணற்றில் விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரா்கள் சென்று அவரது உடலை மீட்டனா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.