அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்கண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலாஉளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமனம்!தூய அரசியல் என்று சொல்லிவிட்டு அழுக்கு அரசியல் செய்கிறார் விஜய்! மு.க. ஸ்டாலின்
/

ஆடையில் தீப்பிடித்து ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு

போடியில் படுக்கையில் புகைபிடித்தபோது ஆடையில் தீப்பிடித்து காயமடைந்த ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 12:37 am IST

போடியில் படுக்கையில் புகைபிடித்தபோது ஆடையில் தீப்பிடித்து காயமடைந்த ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், போடி சுப்புராஜ் நகா் புதுக்குடியிருப்பைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் ஆறுமுகம் (75). தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவா். குடிப் பழக்கத்துக்கு அடிமையான இவா், பேச முடியாத, ஒரு கை செயலிழந்த நிலையில் உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்தாா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை படுக்கையில் இருந்தபடி புகைபிடித்தபோது அவரது ஆடையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பரவி தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அவரது மனைவி லீலா (70) தீயை அணைத்து அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தாா்.

அங்கு ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.