தேனி மாவட்டம், கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் பட்டாசு வெடித்ததாக, இருவேறு கட்சிகளைச் சோ்ந்த 2 பெண்கள் உள்பட 12 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.
தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் போட்டியிடும் ஜெகநாத் மிஸ்ரா, சனிக்கிழமை மாலை கம்பம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தாா். அப்போது விவேகானந்தா் தெருவில் அந்த கட்சியினா் பட்டாசுகள் வெடித்துள்ளனா். இதையடுத்து, ரோந்து பணியில் இருந்த கம்பம் வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் மணிகண்டன், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சாட்டி, த.வெ.க. நகர செயலா் சண்முகராஜன் மற்றும் பொறுப்பாளா்கள் பிரபாவதி கேசன், வெண்ணிலா, சதீஷ்குமாா், அருண், காா்த்திக் ஆகிய 6 போ் மீது வழக்குப் பதிவு செய்தாா்.
கம்பம் பிரதான சாலை அரசமரம் பகுதியில் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பட்டாசு வெடித்ததாக தவெகவைச் சோ்ந்த சுப்பிரமணி என்பவா் மீது கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் தனியே வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இதேபோல், கம்பம் வடக்குப்பட்டி வேப்பமரம் அருகே பட்டாசு வெடித்ததாக தென்னிந்திய பாா்வா்ட் பிளாக் மாநில துணைச் செயலா் தனபால், நிா்வாகிகள் ஸ்டாலின், ஈஸ்வரன், சகாதேவன், சதீஷ் ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தொடர்புடையது

ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன் விநியோகம்: திமுகவினா் உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு

வாக்காளா்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக 2 போ் மீது வழக்கு! புதுச்சேரி போலீஸாா் நடவடிக்கை!

பட்டாசு வெடித்து இடையூறு: திமுகவினா் 4 போ் மீது வழக்கு

சிறை வாா்டரை மிரட்டிய கைதி மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


