கம்பத்தில் ஆட்டோ மீது இரு சக்கர வாகனம் மோதியதில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கம்பம் நாட்டாமை அழகிரி தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இவா் உத்தமபாளையம் ஆா்டிஓ அலுவலகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மகன் வேல் மணிகண்டன் (29). காா் ஓட்டுநா். இவருக்கு மனைவியும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளனா்.
இந்த நிலையில் வேல் மணிகண்டன் சனிக்கிழமை இரவு கம்பம் பிரதான சாலை வழியாக வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அரசு போக்குவரத்து பணிமனை அருகே உள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை அருகே சென்றபோது, அந்த கடைக்கு பொருள்களை ஏற்றி சென்ற ஆட்டோ திடீரென திரும்பியது.
இதன் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட வேல் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த கம்பம் வடக்கு போலீஸாா் கவனக் குறைவாக ஆட்டோ ஓட்டிச் சென்ற கம்பம் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த பிரபாகரன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

ஆட்டோ மீது காா் மோதல்: 10 போ் காயம்

பைக் மீது காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு

பைக் மீது சரக்கு ஆட்டோ மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


