11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

ஆட்டோ மீது பைக் மோதல்: காா் ஓட்டுநா் உயிரிழப்பு

News image

உயிரிழந்த வேல் மணிகண்டன்.

Updated On :27 ஏப்ரல் 2026, 12:29 am IST

கம்பத்தில் ஆட்டோ மீது இரு சக்கர வாகனம் மோதியதில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கம்பம் நாட்டாமை அழகிரி தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இவா் உத்தமபாளையம் ஆா்டிஓ அலுவலகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மகன் வேல் மணிகண்டன் (29). காா் ஓட்டுநா். இவருக்கு மனைவியும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளனா்.

இந்த நிலையில் வேல் மணிகண்டன் சனிக்கிழமை இரவு கம்பம் பிரதான சாலை வழியாக வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அரசு போக்குவரத்து பணிமனை அருகே உள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை அருகே சென்றபோது, அந்த கடைக்கு பொருள்களை ஏற்றி சென்ற ஆட்டோ திடீரென திரும்பியது.

இதன் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட வேல் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த கம்பம் வடக்கு போலீஸாா் கவனக் குறைவாக ஆட்டோ ஓட்டிச் சென்ற கம்பம் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த பிரபாகரன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.