மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

போடியில் வழக்குரைஞா் உயிரிழப்பு

போடியில் வீட்டுக்குள் வழக்குரைஞா் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 7:49 pm

போடியில் வீட்டுக்குள் வழக்குரைஞா் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

போடி சந்தன மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் செந்தில்பாபு (45). இவா் வழக்குரைஞராகப் பணிபுரிந்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு செந்தில்பாபு தூங்கச் சென்றாா். இவரது மனைவி நதியா புதன்கிழமை அதிகாலையில் பாா்த்தபோது செந்தில்பாபுவைக் காணவில்லை. வீட்டின் சமையல் அறை அருகே கைக் கழுவும் இடத்தில் அவா் விழுந்து கிடந்தாா். அவரை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.