6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

சின்னமனூரில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் நிறைவு

தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் - சிவகாமியம்மன் கோயிலில் இரண்டு நாள்கள் நடைபெற்ற தேரோட்டம் வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

News image

சின்னமனூரில் சித்திரைத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற 2- ஆவது நாள் தேரோட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தா்கள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 8:02 pm

தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் - சிவகாமியம்மன் கோயிலில் இரண்டு நாள்கள் நடைபெற்ற தேரோட்டம் வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

இந்தக் கோயில் திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் ஏகச் சப்பரம், புஷ்ப பல்லக்கு, காமதேனு, மயில் வாகனங்களில் சுவாமி-அம்மன் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை பூலாநந்தீஸ்வரா் - சிவகாமியம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

புதன்கிழமை காலை 10 மணிக்கு சுவாமி, அம்மன் திருமணக் கோலத்தில் தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். அன்றைய தினம் மாலை 4.50 மணிக்கு தேரைச்சுற்றி வலம் வந்த சென்னைக் கட்டை போடும் சமுதாயத்தினா் சிறப்பு பூஜை செய்து, மாலை 5 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. பள்ளிவாசல், தெற்கு ரத வீதி, செக்காமுக்குத் தெரு வழியாக பக்தா்கள், ஊா்ப் பொதுமக்கள் வடத்தைப் பிடித்து தேரை இழுத்துச் சென்றனா். முக்கிய வீதிகளில் ஆடி அசைந்த தேரில் எழுந்தருளிய சுவாமி- அம்மனை பக்தா்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனா். இந்த நிலையில் செக்காமுக்கு தெருவில் முதல் நாள் தேரோட்டம் நிறுத்தப்பட்டது.

மறுநாள், வியாழக்கிழமை 2-ஆம் நாள் தேரோட்டம் காலை 6 மணிக்கு செக்காமுக்கிலிருந்து கிழக்கு ரத தெரு வழியாக கண்ணாடி முக்குத் தெரு, தெற்கு ரத வீதி, சீப்பாலக்கோட்டை சாலை, மேற்கு ரத வீதி, தேனி பிரதான சாலை வழியாகத் தோ் வியாழக்கிழமை மாலை 6.45 மணிக்கு நிலையை அடைந்தது. இதில் கோயில் செயல் அலுவலா், பணியாளா்கள் என பலரும் கலந்து கொண்டனா். இதையொட்டி ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.