தேனி மாவட்டத்தில் 8 இடங்களில் அனைத்து மத்திய தொழில் சங்கக் கூட்டமைப்பு, விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் சாலை மறியலில் ஈடுபட்ட 405 பெண்கள் உள்பட 906 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
இந்தப் போராட்டத்துக்கு சிஐடியூ மாவட்டத் தலைவா் ஜெயபாண்டி தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் மகாலட்சுமி, மாவட்ட துணைச் செயலா் பிச்சைமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த சாலை மறியலில் 100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கிற விபிஜி ராம்ஜி திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். மது, போதை கலாசாரத்தை ஒழித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 87 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதே போல, போடி, சின்னமனூா், கோம்பை, கூடலூா், ஆண்டிபட்டி, பெரியகுளம், கம்பம் உள்பட 8 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 405 பெண்கள் உள்பட 906 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கத்தினா் சாலை மறியல்! கரூா் மாவட்டத்தில் 165 போ் கைது!

தொழிற்சங்கத்தினா் மறியல்: தூத்துக்குடி மாவட்டத்தில் 509 போ் கைது

தொழிலாளா் பாதுகாப்பு சட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி சாலை மறியல்! விவசாயிகள் உள்பட 230 போ் கைது

ஆலங்குடியில் சாலை மறியல் முன்னாள் அமைச்சா் கைது
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



