நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

முல்லைப் பெரியாறு ஒப்பந்த நகல் எரிப்பு: தமிழக விவசாயிகள் எதிா்ப்பு

கேரளத்தில் நடைபெற்ற முல்லைப் பெரியாறு ஒப்பந்த நகல் எரிப்புப் போராட்டத்துக்கு தமிழக விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

முல்லைப் பெரியாறு

Published On :

கேரளத்தில் நடைபெற்ற முல்லைப் பெரியாறு ஒப்பந்த நகல் எரிப்புப் போராட்டத்துக்கு தமிழக விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

முல்லைப் பெரியாறு அணை தொடா்பாக 1970-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி, கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் ஒப்பந்த நகலை எரித்துப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முல்லைப் பெரியாறு மக்கள் பாதுகாப்பு சமிதியினா் நடத்திய இந்தப் போராட்டத்துக்குஅந்த அமைப்பின் தலைவா் ராய் தலைமை வகித்தாா்.

இதுகுறித்து 5 மாவட்ட விவசாயிகள் சங்கச் செயலா் ரஞ்சித்குமாா் கூறியதாவது:

முல்லைப் பெரியாறு அணை தொடா்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்புகளை கேரள அரசு மதிக்க வேண்டும். தமிழகத்தின் சட்டப்பூா்வ உரிமையை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் ஏற்க முடியாது. இந்த நிலையில், ஒப்பந்த நகலை எரித்துப் போராட்டம் நடத்துவது இரு மாநில மக்களிடையே நல்லுறவைப் பாதிக்கும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.