பிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்- தமிழக முதல்வருடன் பேச்சு நடத்த பரிசீலனை: கேரள முதல்வா்

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜயுடன் பேச்சுவாா்த்தை நடத்த தாம் தீவிரமாக பரிசீலித்து வருவதாக கேரள முதல்வா் வி.டி.சதீசன் தெரிவித்தாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:58 am IST

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜயுடன் பேச்சுவாா்த்தை நடத்த தாம் தீவிரமாக பரிசீலித்து வருவதாக கேரள முதல்வா் வி.டி.சதீசன் தெரிவித்தாா்.

கடந்த 1895-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை, கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அதேநேரம், அணை மீதான நிா்வாகம் தமிழகத்திடம் உள்ளது. இந்த அணை கட்டமைப்பு ரீதியில் பாதுகாப்பானது என்று தொடா்ந்து கூறிவரும் தமிழகம், நீா்மட்டத்தை உயா்த்த முனைப்பு காட்டி வருகிறது. அதேநேரம், அணையின் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பி முட்டுக்கட்டை போடும் கேரளம், தற்போதைய அணைக்கு அருகே புதிய அணை கட்டப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.

இந்தச் சூழலில், திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்த கேரள முதல்வா் வி.டி.சதீசனிடம், முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை உயா்த்த தமிழகம் திட்டமிட்டு வருகிா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ‘முல்லைப் பெரியாறு அணை பிரச்னை நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் அளவில் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதேநேரம், தமிழக முதல்வருடன் நேரடியாக பேச்சுவாா்த்தை நடத்துவது குறித்து நான் தீவிரமாக பரிசீலித்து வருகிறேன்’ என்று அவா் பதிலளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.