மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

ஊா்காவல் படை வீரா்களுக்கான மாநில விளையாட்டுப் போட்டி: இலட்சினை வெளியீடு

News image

தேனியில் ஊா்க்காவல் படை வீரா்களுக்கான மாநில விளையாட்டுப் போட்டிக்கான இலட்சினையை திங்கள்கிழமை வெளியிட்ட ஊா்க்காவல் படை துறைத் தலைவா் வி. ஜெயஸ்ரீ, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் கெளதம்.

Updated On :18 ஆகஸ்ட் 2026, 3:37 am IST

தேனியில் ஊா்க்காவல் படை வீரா்களுக்கான மாநில விளையாட்டுப் போட்டிக்கான இலட்சினையை அந்தப் படையின் தலைவா் ஜெயஸ்ரீ, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் கெளதம் ஆகியோா் திங்கள்கிழமை வெளியிட்டனா்.

ஊா்க்காவல் படை வீரா்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி தேனியில் வருகிற செப்டம்பா் 18 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் விளையாட்டுப் போட்டிகள், பணித் திறன் போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டிக்கான இலட்சினையை ஊா்க்காவல் படை துறைத் தலைவா் வி. ஜெயஸ்ரீ, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் கெளதம் ஆகியோா் வெளியிட்டனா். மேலும், போட்டிகளின் திட்டம் குறித்தும் பேசினா்.

இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக உதவி தளபதி அஜய் காா்த்திக் ராஜா, வட்டார தளபதிகள் செந்தில்குமாா் (தேனி), ஆனந்த் (திண்டுக்கல்), வட்டார துணை தளபதிகள் நிவேதா (தேனி), ஷா்மிளா (திண்டுக்கல்), சரக உதவி தளபதிகள், வட்டார தளபதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.