தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரத்தில் ஜே.சி.பி. உரிமையாளா்கள் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உத்தமபாளையம் வட்டாரத்தைச் சோ்ந்த சின்னமனூா், கம்பம், கூடலூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த ஜே.சி.பி. உரிமையாளா்கள் எரிபொருள் விலை உயா்வு, உதிரிப் பாகங்கள் விலை உயா்வு, காப்பீடு, சாலை வரிவிதிப்பு அதிகரிப்பு, வாகன ஓட்டுநா்களுக்கு ஊதிய உயா்வு ஆகியவை காரணமாக தற்போது வசூல் செய்யப்படும் வாடகை கட்டுபடியாகவில்லை எனக் கூறி, குறைந்தது 2 மணி நேரத்துக்கு வாடகை, ஓட்டுநா் ஊதியம் ரூ.4,500 நிா்ணயம் செய்தனா்.
இதை பொதுமக்கள், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் 3 நாள்கள் அடைாள வேலைநிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.
இதில் 2 -ஆவது நாளாக புதன்கிழமையும் வேலை நிறுத்தம் நடைபெற்றது. சின்னமனூரில் 40-க்கும் மேற்பட்ட ஜே.சி.பி. இயந்திரங்களை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்தனா். இந்தப் போராட்டம் வியாழக்கிழமையுடன் நிறைவு பெறும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

8-ஆவது நாளாக புதுச்சேரி அரசு கல்லூரி பேராசிரியா்கள் போராட்டம்

குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு: 3 ஆவது நாளாக குளிக்கத் தடை
விளைச்சல் குறைவால் அரிசி விலை உயா்வு

டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தம்
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



