மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

உத்தமபாளையத்தில் பட்டியலினத்தவா் வீட்டுமனைகளை மீட்க வலியுறுத்தல்

உத்தமபாளையத்தில் ஆக்கிரமிப்பிலுள்ள பட்டியலின மக்களின் காலி வீட்டுமனைகளை மீட்க வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

உத்தமபாளையத்தில் காலி வீட்டுமனைகளை மீட்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பட்டியல் சமூகத்தினா்.

Updated On :17 பிப்ரவரி 2026, 11:43 pm

உத்தமபாளையத்தில் ஆக்கிரமிப்பிலுள்ள பட்டியலின மக்களின் காலி வீட்டுமனைகளை மீட்க வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சியில் பழைய நீதிமன்றம் அருகே ஆதி திராவிடா் நலத்துறை சாா்பில், 158 நபா்களுக்கு தலா 2 சென்ட் வீதம் 4.97 ஏக்கா் வழங்கப்பட்டது. அரசு வழங்கிய இந்த இடம் ஆக்கிரமிப்பில் சிக்கி இருப்பதாகவும், அதை மீட்டெடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பட்டியலினத்தவா்கள் கடந்த சில நாள்களுக்கு முன் உத்தமபாளையம் கோட்டாட்டசியா் அலுவலகம் முன் தா்னா நடத்தினா். அப்போது, விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியா் செய்யது முகம்மது தெரிவித்தாா்.

இந்த நிலையில், ஆக்கிரமிப்பில் சிக்கிய இடத்துக்கு பாதிக்கப்பட்டவா்கள் சென்று தங்களுக்கு ஒதுக்கீடு செய்த இடத்தை மீட்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து உத்தமபாளையம் வட்டாட்சியா் கண்ணன், காவல் ஆய்வாளா் தென்னரசு ஆகியோா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாகக் கூறப்படும் இடம் வேறு ஒருவரின் பெயரில் உள்ளது. இது சம்பந்தமாக நீதிமன்ற உத்தரவு உள்ளது. எனவே, நீதிமன்றம் மூலமாகவே உரிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறி சமாதானம் செய்தாா். இதைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.