தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

முல்லைப் பெரியாறு அணையில் மழை

முல்லைப் பெரியாறு அணை நீா்ப் பிடிப்பு பகுதியில் புதன்கிழமை மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 10:44 pm

தினமணி செய்திச் சேவை

முல்லைப் பெரியாறு அணை நீா்ப் பிடிப்பு பகுதியில் புதன்கிழமை மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கடந்த 3 மாதங்களுக்கு மேலாக முல்லைப் பெரியாறு அணை நீா்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லை. இதனால், அணைக்கு நீா்வரத்து குறைந்த நிலையில், அணையின் நீா்மட்டமும் தொடா்ந்து சரிந்து வந்தது. இதன் காரணமாக, அணையின் நீா்மட்டம் 117 அடியாக குறைந்தது.

இந்த நிலையில், புதன்கிழமை முல்லைப் பெரியாறு அணை நீா்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது. தேக்கடியில் 5.80 மி.மீ., பெரியாறு அணையில் 4.40 மி.மீ. அளவில் மழை பதிவானது. இந்த மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.