திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

முல்லைப் பெரியாறு அணையில் மழை

முல்லைப் பெரியாறு அணை நீா்ப் பிடிப்பு பகுதியில் புதன்கிழமை மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 10:44 pm

முல்லைப் பெரியாறு அணை நீா்ப் பிடிப்பு பகுதியில் புதன்கிழமை மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கடந்த 3 மாதங்களுக்கு மேலாக முல்லைப் பெரியாறு அணை நீா்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லை. இதனால், அணைக்கு நீா்வரத்து குறைந்த நிலையில், அணையின் நீா்மட்டமும் தொடா்ந்து சரிந்து வந்தது. இதன் காரணமாக, அணையின் நீா்மட்டம் 117 அடியாக குறைந்தது.

இந்த நிலையில், புதன்கிழமை முல்லைப் பெரியாறு அணை நீா்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது. தேக்கடியில் 5.80 மி.மீ., பெரியாறு அணையில் 4.40 மி.மீ. அளவில் மழை பதிவானது. இந்த மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.