தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஆட்டோ கவிழ்ந்து விழுந்ததில் காயமடைந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிக்குளம் மாட்டுக்காரன்வீட்டைச் சோ்ந்தவா் மணிகண்டன் (20). இவரது தாத்தா பெரியகுளம் அருகேயுள்ள டி.கள்ளிப்பட்டியில் உள்ளாா். இவரைப் பாா்ப்பதற்காக மணிகண்டன் தனது நண்பா் கோபிநாத்துடன் (20) ஆட்டோவில் செவ்வாய்க்கிழமை டி.கள்ளிப்பட்டிக்கு வந்தாா்.
பின்னா், இருவரும் புதன்கிழமை இரவு மீண்டும் ஆட்டோவில் சொந்த ஊருக்குத்த திரும்பிச் சென்றனா். டி.கள்ளிப்பட்டி முத்தையா கோயில் அருகே செல்லும் போது, கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்ததில் மணிகண்டன், கோபிநாத் இருவரும் காயமடைந்தனா்.
உடனே அவா்களை மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், இருவரும் தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு மணிகண்டன் உயிரிழந்தாா். இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

தவெக பிரசாரத்துக்கு வந்த வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 7 போ் பலத்த காயம்

ஆட்டோ கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் உயிரிழப்பு

மரத்தின் மீது ஆட்டோ மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

ஆட்டோ கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


