தேனி
உயிரிழந்து கிடந்த மூன்றாம் பாலினத்தவா் உடல் மீட்பு
போடி பேருந்து நிலையத்தில் மூன்றாம் பாலினத்தவா் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மேலச்சொக்கநாதபுரத்தைச் சோ்ந்தவா் சொக்கன் மகன் ராமகிருஷ்ணன் (51). மூன்றாம் பாலினத்தவரான இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாம். மேலும், இவா் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை போடி பேருந்து நிலையத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்தாா். இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
