டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பாஜக நிா்வாகியைத் தாக்கிய தாய், மகன் மீது வழக்கு

தேவாரம் அருகே பாஜக நிா்வாகியைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக தாய், மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :10 ஜனவரி 2026, 6:34 pm

Syndication

தேவாரம் அருகே பாஜக நிா்வாகியைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக தாய், மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தேவாரம் அருகேயுள்ள தே.ரெங்கநாதபுரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (60). இவா் பாரதிய ஜனதா கட்சியின் தேவாரம் கிழக்கு செயலராக இருந்து வருகிறாா்.

இந்த நிலையில், அதே பகுதியில் உள்ள தேநீா்க் கடையில் மணிகண்டனுக்கும் திமுக செயலா் பாஸ்கரனுக்கும் தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து வெள்ளிக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

இதுதொடா்பாக பாஸ்கரனின் உறவினரான மது, அவரது தாய் சுமதி ஆகியோா் சோ்ந்து மணிகண்டனைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில் காயமடைந்த மணிகண்டன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து தேவாரம் காவல் நிலைய போலீஸாா் மது, சுமதி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.