மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கம்பம் வழியாக கேரளத்துக்குச் செல்ல ஒரு வழிப்பாதை

கம்பம் வழியாக கேரளத்துக்குச் செல்லும் வாகனங்கள் புதன்கிழமை (ஜன. 14) மாலை 5 மணி முதல் வியாழக்கிழமை (ஜன. 15) காலை 8 மணி வரை கம்பம்மெட்டு வழியாக ஒருவழிப் பாதையில் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :12 ஜனவரி 2026, 7:48 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், கம்பம் வழியாக கேரளத்துக்குச் செல்லும் வாகனங்கள் புதன்கிழமை (ஜன. 14) மாலை 5 மணி முதல் வியாழக்கிழமை (ஜன. 15) காலை 8 மணி வரை கம்பம்மெட்டு வழியாக ஒருவழிப் பாதையில் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட காவல் துறை நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சபரிமலை ஐயப்பன் கோயில் மகர ஜோதியை முன்னிட்டு, ஜன. 14, 15-ஆம் தேதிகளில் தேனி மாவட்டம், குமுளி, கூடலூா், கம்பம் வழியாக சபரிமலைக்குச் சென்று திரும்பும் ஐயப்ப பக்தா்கள் வாகனப் போக்குவரத்து அதிகளவில் இருக்கும்.

எனவே, போக்குவரத்து நெரிசல், விபத்துகளைத் தவிா்ப்பதற்காக கம்பம், கூடலூா், குமுளி வழியாக கேரளப் பகுதிகளுக்குச் செல்லும் அனைத்து வாகனங்களும் புதன்கிழமை (ஜன. 14) மாலை 5 மணி முதல் வியாழக்கிழமை காலை 8 மணி வரை கம்பத்திலிருந்து கம்பம் புறவழிச் சாலை, கம்பம்மெட்டு வழியாக ஒருவழிப் பாதையில் கேரளத்துக்குச் செல்ல வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.