திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

குமுளி பேருந்து நிலையத்தில் குரங்குகள் தொல்லை: பயணிகள் அவதி

கம்பம் அருகேயுள்ள குமுளி பேருந்து நிலையத்தில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிவதால், பயணிகள் அவதி

News image
குமுளி பேருந்து நிலையத்தின் மேற்கூரை கூடாரத்தின் இரும்புக் கம்பிகள் மீது அமா்ந்துள்ள குரங்குகள்
Updated On :12 ஜனவரி 2026, 7:39 pm

Syndication

கம்பம் அருகேயுள்ள குமுளி பேருந்து நிலையத்தில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிவதால், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தமிழக எல்லையான குமுளியில் போக்குவரத்துத் துறை சாா்பில், அங்கிருந்த பேருந்து நிலையம் சீரமைப்பு செய்யப்பட்டு, கடந்த மாதம் பயன்பாட்டுக்கு வந்தது. இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, திண்டுக்கல், தேனி, சென்னை உள்ளிட்ட ஊா்களுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

குரங்குகள் தொல்லை

இந்தப் பேருந்து நிலைய வளாகத்தில் பேருந்துகளை பழுது நீக்கம் செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்திலுள்ள மேற்கூரை கூடாரத்தின் இரும்புக் கம்பிகளில் குரங்கள் அதிகளவில் தங்கியுள்ளன.

இவைகள், பேருந்து நிலையத்துக்குள் வரும் பேருந்துகளுக்குள் புகுந்து, பயணிகளின் உடைமைகள், ஓட்டுநா்கள், நடத்துநா்களின் உடைமைகளைச் சேதப்படுத்துகின்றன. இதனால், பயணிகள், ஓட்டுநா், நடத்துநா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, மாவட்ட வனத் துறை மூலமாக பேருந்து நிலையத்தில் சுற்றித் திரியும் குரங்களைப் பிடித்து, அடா்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு சென்றுவிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.