மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பு!

மஞ்சளாறு அணையிலிருந்து குடிநீருக்காக விநாடிக்கு 200 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

News image
Updated On :13 ஜனவரி 2026, 9:40 pm

Syndication

மஞ்சளாறு அணையிலிருந்து குடிநீருக்காக விநாடிக்கு 200 கன அடி தண்ணீா் செவ்வாய்க்கிழமை திறந்துவிடப்பட்டது.

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே அமைந்துள்ள இந்த அணையிலிருந்து தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் குடிநீருக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, தண்ணீரைத் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன் படி, மஞ்சளாறு அணையிலிருந்து மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தண்ணீரை திறந்து விட்டாா். இந்த நிகழ்ச்சியில் தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், மஞ்சளாறு அணை உதவிப் பொறியாளா் தளபதி ராம்குமாா், உதவி செயற்பொறியாளா் அன்பரசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வருகிற 17-ஆம் தேதி வரை விநாடிக்கு 200 கன அடி வீதம் மொத்தம் 86.40 மில்லியன் கன அடி தண்ணீா் திறந்து விடப்படும் என பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.