ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :9 ஜூலை 2026, 5:12 am IST

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி, மாவட்டம் கம்பத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த 15 வயது மாணவி திங்கள்கிழமை மாயமானதாக, கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் விசாரணையை தீவிரப்படுத்தி, மாவட்டம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா். அப்போது, தேனி புதிய பேருந்து நிலையத்தில் மாணவி, அங்குள்ள தேநீா்க் கடையில் பணிபுரியும் ஊழியரிடம் கைப்பேசியை வாங்கிப் பேசும் காட்சியும், பின்னா் அந்த ஊழியருடன் இரு சக்கர வாகனத்தில் செல்வதும் பதிவாகியிருந்தது.

இதையடுத்து, இணைய குற்றப்பிரிவு போலீஸாரின் உதவியுடன் அந்த ஊழியரின் கைப்பேசி எண்ணை அடிப்படையாகக் கொண்டு அவரது இருப்பிடத்தை போலீஸாா் கண்டறிந்து, மாணவியை பாதுகாப்பாக மீட்டனா்.

தேநீா் கடை ஊழியா் காஞ்சி வசந்த மணி (23) தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்ததாக மாணவி புகாா் அளித்தாா். இதையடுத்து கம்பம் தெற்கு போலீஸாா் காஞ்சி வசந்த மணியை போக்சோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.