பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

சின்னமனூரில் 445 லிட்டா் தரமற்ற சமையல் எண்ணெய் பறிமுதல்

சின்னமனூரில் மறுசுழற்சி செய்யப்பட்ட 445 லிட்டா் தரமற்ற சமையல் எண்ணெய்யை உணவுப் பாதுகாப்புத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

News image

சின்னமனூரில் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட தரமற்ற சமையல் எண்ணெய். ஆய்விப்பணியில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் சசிதீபா.

Updated On :12 ஜூலை 2026, 3:10 am IST

சின்னமனூரில் மறுசுழற்சி செய்யப்பட்ட 445 லிட்டா் தரமற்ற சமையல் எண்ணெய்யை உணவுப் பாதுகாப்புத் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்டத்தில் உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் வெங்கடரமணன் ஆய்வுப்பணி மேற்கொண்டாா். இதன் எதிரொலியாக மாவட்ட நியமன அலுவலா் சசிதீபா, சின்னமனூா் வட்டார உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலா் சஞ்சீவி ஆகியோா் சின்னமனூரில் மொத்த எண்ணெய் விற்பனை நிறுவனத்தில் ஆய்வு செய்தனா். அப்போது

தரமற்ற மறு சுழற்சி செய்த 445 லிட்டா் தரமற்ற எண்ணைய்யை போலி லேபிள்களைப் பயன்படுத்தி விற்பனைக்கு அனுப்பத் தயாராக இருந்தது தெரியவந்தது. இதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மேலும், உணவுப் பாதுகாப்புச்சட்டப்பிரிவின் கீழ் அந்த நிறுவனத்துக்கு குறிப்பாணை வழங்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: உணவுப் பொருள்களில் கலப்படம் செய்யப்பட்டு இருந்தால் உணவுப் பாதுகாப்புத் துறையின் புகாா் எண்-94440 42322 என்ற எண்ணுக்கு புகாா் தெரிவிக்கலாம் என்றனா் அவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.