தேவாரம் அருகே விஷம் குடித்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், தேவாரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜ் (66). இவரது மனைவி காலமாகி விட்டாா். நான்கு மகள்களுக்கும் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனா்.
இதனால், தன்னை கவனிக்க ஆள் இல்லாததால் நாகராஜ் மனமுடைந்து காணப்பட்டாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை தேவாரம் சின்னதேவி அம்மன் கண்மாய் கரையில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தாா்.
இவரை மீட்டு, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தேவாரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





