சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

முதியவா் தற்கொலை

தேவாரம் அருகே விஷம் குடித்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :11 ஜூலை 2026, 10:30 pm IST

தேவாரம் அருகே விஷம் குடித்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், தேவாரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜ் (66). இவரது மனைவி காலமாகி விட்டாா். நான்கு மகள்களுக்கும் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனா்.

இதனால், தன்னை கவனிக்க ஆள் இல்லாததால் நாகராஜ் மனமுடைந்து காணப்பட்டாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை தேவாரம் சின்னதேவி அம்மன் கண்மாய் கரையில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தாா்.

இவரை மீட்டு, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தேவாரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.