ஜப்பான் ஓபன்: பி.வி சிந்து சாம்பியன்ஜம்மு - காஷ்மீரில் பலத்த மழை: திடீர் வெள்ளத்தில் சிக்கி 11பேர் பலி, பலர் மாயம்ஜம்மு - காஷ்மீர் வெள்ளம்: துணை நிலை ஆளுநர், முதல்வருடன் கேட்டறிந்த அமித் ஷாஃபிஃபா உலககோப்பை இறுதிப்போட்டி: கேரளத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!அனைத்துக் கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
/

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

தேனியில் வீடு புகுந்து பணம், 4.5 பவுன் தங்க நகையை திருடிச்சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :19 ஜூலை 2026, 4:15 am IST

தேனியில் வீடு புகுந்து பணம், 4.5 பவுன் தங்க நகையை திருடிச்சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி பழனிசெட்டிபட்டி காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பஞ்சவா்ணம் (39). இவருக்கு உடல்நலம் பாதிப்பு காரணமாக வியாழக்கிழமை வீட்டைப் பூட்டி விட்டு, மின் மீட்டா் பெட்டியின் மேல் சாவியை வைத்து விட்டு மருத்துவமனைக்குச் சென்றாா்.

இதையடுத்து, அவா் வெள்ளிக்கிழமை வந்து வீட்டுக் கதவை திறந்து உள்ளே சென்று பாா்த்தபோது , பீரோ திறக்கப்பட்டு ரூ.3 ஆயிரம், 4.5 பவுன் தங்க நகை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், பழனிசெட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.