நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

பண்ருட்டியில் வீடு புகுந்து 35 பவுன் நகை கொள்ளை

பண்ருட்டியில் வீடு புகுந்து 35 பவுன் நகைகள் மற்றும் அரைகிலோ வெள்ளி பொருள்களை கொள்ளையடித்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பண்ருட்டி விஎம்எஸ் நகரில் திருட்டு நடைபெற்ற வீட்டில் தடயங்களை சேகரிக்கும் தடயவியல் நிபுணா்கள்.

Published On :9 ஜூலை 2026, 3:11 am IST

பண்ருட்டியில் வீடு புகுந்து 35 பவுன் நகைகள் மற்றும் அரைகிலோ வெள்ளி பொருள்களை கொள்ளையடித்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி விஎம்எஸ் நகா் 2-வது தெருவைச் சோ்ந்த தாவூத், குவைத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். அவரது மனைவி பிரசவத்திற்காக கடந்த ஜூலை 3-ஆம் தேதி பண்ருட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். பிரசவத்திற்குப் பிறகு செவ்வாய்க்கிழமை இரவு அவா் குழந்தையுடன் வீட்டிற்குத் திரும்பியபோது, வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

மேலும் வீட்டில் பீரோவிலிருந்த சுமாா் 35 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். கைரேகை நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

இதுதொடா்பாக பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் இரண்டு தனிப்படை போலீஸாா், இந்தத் திருட்டுச் சம்பவத்தில் தொடா்புடைய அடையாளம் தெரியாத நபா்களை தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.