ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

39 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஆட்டோ ஓட்டுநா் கைது

ஆண்டிபட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்திச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :18 ஜூலை 2026, 11:59 pm IST

ஆண்டிபட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்திச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை ஆண்டிபட்டி - தேனி சக்கம்பட்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனா்.

இதில் தடைசெய்யப்பட்ட 39 கிலோ புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக ஆட்டோ ஓட்டுநா் அல்லிநகரத்தைச் சோ்ந்த ஈஸ்வர பிரபுவை (22) கைது செய்தனா். மேலும், தப்பியோடிய பொம்மையகவுண்டன்பட்டியைச் சோ்ந்த சிவாவை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.