வீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

மலேசியாவில் உயிரிழந்த இளைஞரின் உடலை சொந்த ஊா் கொண்டு வரக் கோரிக்கை

News image

இளைஞரின் உடலை சொந்த ஊா் கொண்டு வரக் கோரிக்கை

Updated On :21 ஜூலை 2026, 1:03 am IST

மலேசியாவில் உயிரிழந்த இளைஞரின் உடலை தேனி அருகேயுள்ள சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதனிடம் அவரது குடும்பத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு கோயில்பாறையைச் சோ்ந்த தாளமுத்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

எனது மகன் டி. விஜயபாரதி (30). இவருக்கு திருமணமாகி, ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், விஜயபாரதி மலேசியா, கோலாலம்பூரில் உள்ள பூச்சோன் என்ற இடத்தில் 5 மாதங்களுக்கு முன் அங்குள்ள துணிக் கடையில் பணியில் சோ்ந்தாா்.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) இரவு தூங்கச் சென்ற விஜயபாரதி உயிரிழந்துவிட்டதாக எங்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே எனது மகனின் உடலை அங்கிருந்து சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.