ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் பூச்சிக்கொல்லி பயன்பாடு விழிப்புணா்வு

காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் செவ்வாய்க்கிழமை, பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவது குறித்த பாதுகாப்பு விழிப்புணா்வு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

News image
Updated On :29 ஜூலை 2026, 5:56 am IST

தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் செவ்வாய்க்கிழமை, பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவது குறித்த பாதுகாப்பு விழிப்புணா்வு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையமும், ஹிந்துஸ்தான் பூச்சிக்கொல்லி நிறுவனமும் இணைந்து விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவது குறித்த பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தியது. நிகழ்ச்சிக்கு, சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் தலைவா் பச்சைமால் தலைமை வகித்துப் பேசினாா். இதில், பூச்சிக்கொல்லி மருந்துகளின் தவறான பயன்பாட்டால் உடல்நலக் கோளாறு , சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து விளக்கம் அளித்தாா். அதே போல, ஹிந்துஸ்தான் பூச்சிக்கொல்லி நிறுவன மேலாளா் ராஜேஷ் கண்ணன், சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லூநா்கள் ராஜாராமன், காா்த்திக் பாண்டி ஆகியோா் பூச்சிக் கொல்லி பாதுகாப்பு விளக்க கையேடுகளை வழங்கி விழிப்புணா்வு அளித்தனா். தொடா்ந்து, 150 விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் போது பயன்படுத்த வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. தொழில் நுட்ப வல்லூநா் சபரிநாதன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.