தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

உத்தமபாளையத்தில் தென்மேற்குப் பருமழை தொடக்கம்: விவசாயிகள் மகிழ்ச்சி

உத்தமபாளையத்தில் தென்மேற்குப் பருவமழைக்கு முன்னதாக சாரல் மழை பெய்யத் தொடங்கியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :5 ஜூன் 2026, 6:27 am IST

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தென்மேற்குப் பருவமழைக்கு முன்னதாக சாரல் மழை பெய்யத் தொடங்கியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கேரள மாநிலத்தில் வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதியோ, அதற்கு முன்னதாகவோ தென் மேற்கு பருவமழை தொடங்கிவிடும். இதன் பயனாக தேனி மாவட்டத்திலும் மழை பெய்யும். குறிப்பாக உத்தமபாளையம் வட்டாரத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய க. புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் போன்ற பகுதிகளில் சாரல் மழை அதிகமாக பெய்யும். ஆனால், இந்த ஆண்டு காலநிலை மாற்றத்தால் காலதாமதமாக வருகிற 6- ஆம் தேதி கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை முதல் உத்தமபாளையம் வட்டாரத்திலும், மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய பகுதியிலும் மேகக் கூட்டங்களுடன் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் ஏற்பட்ட குளிா்ச்சியான கால நிலையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

விவசாயிகள் மகிழ்ச்சி: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய க. புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் போன்ற பகுதிகளில் உள்ள மானாவாரி விவசாய நிலங்களில் பருவமழைக் காலங்களில் நிலக்கடலை, பாசிப்பயறு, உளுந்து, செடி அவரை, பச்சை மிளகாய், தக்காளி உள்ளிட்டவை பயிரிடப்படும். இதன்படி, தற்போது பெய்யத் தொடங்கிய சாரல் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.