கம்பத்திலிருந்து கேரள மாநிலத்தின் நெடுங்கண்டம், கட்டப்பனை பகுதிகளுக்கு இயக்கப்படும் தமிழக அரசுப் பேருந்துகளை முறையாக இயக்க வலியுறுத்தி ஏலக்காய் தோட்டத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தேனி மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தின் கம்பம்மெட்டு, கூட்டாறு, நெடுங்கண்டம், வண்டன்மேடு, மாலி, கட்டப்பனை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏலக்காய் தோட்டங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளுக்கு கம்பம், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் தினமும் பணிக்குச் சென்று வருகின்றனா்.
இந்த நிலையில், தொழிலாளா்களின் போக்குவரத்து வசதிக்காக கம்பத்தில் இருந்து தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் நெடுங்கண்டம், கட்டப்பனை பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனினும், பேருந்துகள் அடிக்கடி பழுதடைவதால் சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும், இதனால் தொழிலாளா்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருவதாகவும் புகாா் எழுந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை நெடுங்கண்டம் செல்ல வேண்டிய பேருந்து பழுது காரணமாக இயக்கப்படாததால், அதிருப்தியடைந்த தொழிலாளா்கள் கம்பம்மெட்டு பிரிவு சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா, தனது உதவியாளா்களை சம்பவ இடத்துக்கு அனுப்பி பேச்சுவாா்த்தை நடத்த ஏற்பாடு செய்தாா். மேலும், போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் பேசி பேருந்து சேவையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

குடிநீா் கோரி அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியல்

‘மின்சார பேருந்துகளை நேரடி கட்டுப்பாட்டில் இயக்க வேண்டும்’

மாவட்டத்துக்குள் இயக்கப்படும் பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும்! மார்க். கம்யூனிஸ்ட்!

மொரப்பூா்- காரிமங்கலம் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



