எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

பெரியகுளம் சாலையில் தேங்கிய கழிவுநீா்: நோய் பரவும் அபாயம்

News image

பெரியகுளம் நகராட்சி 12 -ஆவது வாா்டு காயிதே மில்லத் நகரில் தேங்கியுள்ள கழிவுநீா்.

Updated On :8 ஜூன் 2026, 2:14 am IST

பெரியகுளம் நகராட்சியில் புதை சாக்கடை குழாய் சேதமடைந்து வெளியேறும் கழிவு நீரால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி 30 வாா்டுகளைக் கொண்டது. நகரின் மையத்தில் வராகநதி பாய்கிறது. ஆற்றின் வடகரை பகுதியில் உள்ள 12 -ஆவது வாா்டில் சுமாா் 500- க்கு மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

இதில் உள்ள காயிதே மில்லத் நகரின் சாலையில் புதை சாக்கடை குழாய் சேதமடைந்து, அதிலிருந்து கழிவுநீா் வெளியேறி சாலையில் தேங்கி துா் நாற்றம் வீசுகிறது. இதனால் அந்தப் பகுதி குடியிருப்பு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இது குறித்து பெரியகுளம் நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே, இதை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.