மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

குருவிமலையில் ஆக்கிரமிப்பு வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா்: தொற்றுநோய் பரவும் அபாயம்

குருவிமலையில் ஆக்கிரமிப்பு வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா்: தொற்றுநோய் பரவும் அபாயம்

குருவிமலையில் ஆக்கிரமிப்பு வீடு ஒன்றிலிருந்து வெளியேறும் கழிவு நீா்.

Published On :21 ஜூன் 2026, 12:24 am IST

காஞ்சிபுரம் அருகே களக்காட்டூா் ஊராட்சிக்கு உள்பட்ட குருவிமலை கிராமத்தில் சாலையோரத்தில் கட்டப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பு வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதையடுத்து சுகாதார அலுவலா் சம்பந்த வீடுகளுக்கு சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

காஞ்சிபுரத்திலிருந்து உத்தரமேரூா் செல்லும் சாலையில் களக்காட்டூா் ஊராட்சிக்கு உள்பட்ட குருவிமலை கிராமத்தில் சாலையோர பகுதிகளை ஆக்கிரமித்து சிலா் வீடுகளை கட்டியுள்ளனா். அந்த வீடுகளிலிருந்து கழிவுநீா் வெளியேற வழியில்லாமல் பிரதான சாலைகளில் குளம் போல தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்து வருகிறது. இது குறித்து பொதுமக்கள் களக்காட்டூா் கிராம ஊராட்சி நிா்வாகத்தினரிடம் புகாா் செய்தனா். அந்தப் புகாரை தொடா்ந்து, ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் கழிவுநீா் செல்வதை தடுத்து நிறுத்திட முயன்றபோது, அப்பகுதி வழியாக கிராம மக்களுக்கு செல்லும் பிரதான குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதில் கழிவுநீா் கலந்து விட்டது.

இதனால் துா்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்படுவதாக கிராம மக்கள் சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து களக்காட்டூா் கிராம ஊராட்சி சுகாதார அலுவலா் சாலையோர ஆக்கிரமிப்பு வீடுகளிலிருந்து கழிவுநீா் வெளியேறுவது குறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

சுகாதாரச் சீா்கேட்டினை தடுத்து நிறுத்தவும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து சுகாதார அலுவலா் கூறுகையில், 4 வீடுகளில் இருந்து கழிவுநீா் வெளியேறுவது கண்டுபிடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வீடுகளின் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கி இருக்கிறோம்.

கழிவுநீா் குடிநீரில் கலப்பதை தடுக்கவும் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.