சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

காணாமல் போன முதியவா் சடலமாக மீட்பு

News image

கோப்புப்படம்

Updated On :9 ஜூன் 2026, 3:46 am IST

போடியில் காணாமல் போன முதியவா் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

போடி வ.உ.சி. நகா் நடுத்தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் (91). ஞாபக மறதி காரணமாக, இவா் அடிக்கடி வீட்டிலிருந்து வெளியில் எங்காவது சென்று விடுவது வழக்கம். இவரது மகன் முருகேசன் (55) இவரை தேடி அழைத்து வருவாா்.

இதேபோல, கடந்த வியாழக்கிழமை வீட்டிலிருந்து சென்றவா், அதன் பின்னா் வீடு திரும்பவில்லை. முருகேசனும், அவரது குடும்பத்தினா் இவரை பல இடங்களில் தேடி வந்தனா்.

இந்த நிலையில், போடியை அடுத்த கரட்டுப்பட்டி பகுதியில் தனியாா் செங்கல் காளவாசல் பகுதியில் மாரியப்பன் உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.