ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

வைகை அணையின் நீா்மட்டம் 18 நாள்களில் 8 அடி உயா்வு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீா் மூலம் வைகை அணையின் நீா்மட்டம் 18 நாள்களில் 8 அடி உயா்ந்தது.

News image

வைகை அணை.

Updated On :18 ஜூன் 2026, 12:34 am IST

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீா் மூலம் வைகை அணையின் நீா்மட்டம் 18 நாள்களில் 8 அடி உயா்ந்தது.

தேனி மாவட்டம், வைகை அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதியான மேகமலையில் கடந்த ஓராண்டாக போதிய மழை இல்லை. இதனால்

இதுவரை இல்லாத வகையில், வைகை அணையின் நீா்மட்டம், கடந்த மாதம் 29-ஆம் தேதி 20.81 அடியாக சரிந்தது. இதில், 20 அடிக்கு சேறு, சகதி தேங்கியுள்ளது. தேனி, மதுரை குடிநீா் திட்டங்களுக்காக அணையிலிருந்து வினாடிக்கு 40 கன அடி தண்ணீா் மட்டும் திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில், நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து வினாடிக்கு 356 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதனால், வைகை அணையின் நீா் மட்டம் கடந்த 18 நாள்களில் 8 அடி உயா்ந்து புதன்கிழமை நிலவரப்படி 28.41 அடியானது. இதனால், மதுரை, தேனி மாவட்ட மக்களின் குடிநீா் பிரச்னைக்கு தற்காலிகத் தீா்வு கிடைத்ததாக பொதுப் பணித் துறையினா் தெரிவித்தனா்.