பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அங்கன்வாடி மையத்துக்கு அடிப்படை வசதி கோரி தா்னா

உத்தமபாளையம் ஒன்றியம், அம்மாபட்டி ஊராட்சி அலுவலகம் முன் அங்கன்வாடி மையத்துக்கு அடிப்படை வசதி கோரி அதிமுக பிரமுகா் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

News image
தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக கிளைச் செயலா்.
Updated On :12 மார்ச் 2026, 12:00 am

தினமணி செய்திச் சேவை

உத்தமபாளையம் ஒன்றியம், அம்மாபட்டி ஊராட்சி அலுவலகம் முன் அங்கன்வாடி மையத்துக்கு அடிப்படை வசதி கோரி அதிமுக பிரமுகா் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அம்மாபட்டி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் குழந்தைகளின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்தது. இந்த மையத்தின் முன்பாக புறம்போக்கு இடத்தில் புதா்மண்டி கிடப்பதால் விஷப் பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்தது.

இந்த நிலையில், உ.அம்மாபட்டி அதிமுக கிளைச்செயலா் ரஞ்சித், இந்த மையத்துக்கு அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தி ஊராட்சி அலுலகம் முன்பாக படுத்துக்கொண்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இதைத்தொடா்ந்து ஊராட்சி நிா்வாகம் தூய்மைப் பணியாளா் மூலம் அங்கன்வாடி மையப் பகுயிதில் புதா்மண்டிக் கிடந்ததை அகற்றினா். இதையடுத்து, அவா் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து சென்றாா்.

Story image